Monday, September 21, 2015

குர்ஆன் 112:1



வலையுகம் ஹைதர் அலி's photo.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகதுஹு
ஏகத்துவம் இல்லையென்றால் ஏதுவும் இல்லை. மறுமையில் நபியவர்களின் பரிந்துரையும் இல்லை பார்க்க ஹதீஸ்.
'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்' என்று கூறினார்கள்"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 99

No comments:

Post a Comment