பொறாமை இஸ்லாம் வெறுக்கும் தீயகுணம்...!
பொறாமை குணம் உடையவர்கள் ஒருபோதும் அமைதி அடையமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டு மனம் உடைந்து போவார்கள். அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா வகையிலும் முயல்வார்கள். அவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள்.
அவர்களின் உரிமையைப் பறிக்கவும், உயிர், உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவும் முற்படுவார்கள். இவ்வாறு அடுத்தவர்களை அழிக்க முயல்கையில் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் நற்பெயருக்கு அவர்களே களங்கம் தேடிக்கொள்வார்கள்.
எனவேதான் நபி (ஸல்) அவர்கள், “ நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது” எனக் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் )
No comments:
Post a Comment